Wednesday, July 19, 2017

கால விரயர்கள்

மணித் துளிகளைத்
தண்ணீராய்ச் 
செலவிடும் 
பரோபகாரிகள்...

இவர்கள் இட்ட 
நேர  தானத்தில்
செழித்துக் கொழிக்கிறார்கள் 
இந்த
ஊர்ச் சினிமாக்காரர்கள் ..
சின்னத்திரை வியாபாரிகள்..

பரவாயில்லை 
உங்கள் 
கருணையுள்ளம்..
எவருக்கும்
அரிதாய்த் 
தெரியும்  காலத்தையே 
கொடையாய்க்  கொடுக்கிறீர்கள்
பலருக்கு......



நல்ல நேரம் பார்க்காமல் 
இவர்கள் எதையும் 
செய்வதில்லை
பஞ்சாங்கம் பார்க்காமல் 
பயணப் படுவதில்லை..

எதையும் கணக்குப் பார்க்காமால்
செய்வதில்லை

ஆனால்

காலத்தை வீணடிப்பதைக்
மட்டும்?.

No comments:

Post a Comment