Saturday, October 7, 2017

பழையோர் கலை

இது
சனங்களின் தர்மம்!
சாத்திரங்களும்,
சம்பிரதாயங்களும்,
உருப்போடப்பட்டு
வாழ்வின் ஒவ்வொரு
செயலையும்,
அதன் மேலேயே
கட்டமைத்து
சென்று கொண்டேயிருக்கிறது..

இங்கு
சனங்களின்
இனங்களுக்கு அளவேயில்லை!
அது போலவே,
சம்பிரதாயங்களுக்கும்
இனதிற்கொன்று, வீட்டிற்கொன்று!
உருவாக்கியவனைத்
தெரியாது!
உலவவிட்டவனைத்
தெரியாது!
ஆனால் உயிர் போல
மெய்ப்பித்திருக்கிறது!

இச்சாத்திரங்களும்,
சம்பிரதாயங்களும்
இல்லையென்றால்
தம் வாழ்வே
வீணென்று நினைப்பவர்கள்..
ஏன் செய்ய வேண்டும்?
எதற்க்காக நிகழ்த்தல்
வேண்டும்?
காரணம் கூற இயலாது,
இந்த
தர்மங்களின் சனத்திற்கு..!

அவற்றிற்கு
பழகியவர்களும்
பழகியவற்றைக்
கட்டைபிடிகிக்கிறோம்
என்பவர்களுமே கோடி கோடியாய்
இருக்கும் தர்மம்!

தங்கள்
பழையோர் சமைத்த
வரலாற்றுப் பொக்கிஷங்கள்!
கற்பனையைக் கல்லின்
மேலேற்றி  காலங்கள்
பல கடந்த அற்புதங்கள்!
உளியினால்
புனையப்பட்ட
மீளுருவாக்கம் செய்யவே முடியாத
விலைமதிப்பில்லா
வரலாறுகள்...!
இவைகள் கடல் கடந்து
சிறையெடுத்துச் செல்லப்படுவதை
உணராமலிருக்கிறார்கள்.
தொன்மங்களைத்
தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்துச்
சம்பிரதாயங்களுக்கும்
கணக்கு வைத்திருக்கும்
இவர்களிடம்
கலைகளைப் பற்றிய
கணக்கு மட்டும் இல்லை .

உன்னை
வேண்டாமென்கிறார்கள்!
உன் தர்மத்தை
தள்ளி வைக்கிறார்கள்
அயல் நாட்டார்!
ஆனால் உன்
பழையோர்  கலை மட்டும்
வேண்டுமென்கிறார்கள்!
உனக்குப்
புரியவில்லையா ?..