Saturday, October 7, 2017

பழையோர் கலை

இது
சனங்களின் தர்மம்!
சாத்திரங்களும்,
சம்பிரதாயங்களும்,
உருப்போடப்பட்டு
வாழ்வின் ஒவ்வொரு
செயலையும்,
அதன் மேலேயே
கட்டமைத்து
சென்று கொண்டேயிருக்கிறது..

இங்கு
சனங்களின்
இனங்களுக்கு அளவேயில்லை!
அது போலவே,
சம்பிரதாயங்களுக்கும்
இனதிற்கொன்று, வீட்டிற்கொன்று!
உருவாக்கியவனைத்
தெரியாது!
உலவவிட்டவனைத்
தெரியாது!
ஆனால் உயிர் போல
மெய்ப்பித்திருக்கிறது!

இச்சாத்திரங்களும்,
சம்பிரதாயங்களும்
இல்லையென்றால்
தம் வாழ்வே
வீணென்று நினைப்பவர்கள்..
ஏன் செய்ய வேண்டும்?
எதற்க்காக நிகழ்த்தல்
வேண்டும்?
காரணம் கூற இயலாது,
இந்த
தர்மங்களின் சனத்திற்கு..!

அவற்றிற்கு
பழகியவர்களும்
பழகியவற்றைக்
கட்டைபிடிகிக்கிறோம்
என்பவர்களுமே கோடி கோடியாய்
இருக்கும் தர்மம்!

தங்கள்
பழையோர் சமைத்த
வரலாற்றுப் பொக்கிஷங்கள்!
கற்பனையைக் கல்லின்
மேலேற்றி  காலங்கள்
பல கடந்த அற்புதங்கள்!
உளியினால்
புனையப்பட்ட
மீளுருவாக்கம் செய்யவே முடியாத
விலைமதிப்பில்லா
வரலாறுகள்...!
இவைகள் கடல் கடந்து
சிறையெடுத்துச் செல்லப்படுவதை
உணராமலிருக்கிறார்கள்.
தொன்மங்களைத்
தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்துச்
சம்பிரதாயங்களுக்கும்
கணக்கு வைத்திருக்கும்
இவர்களிடம்
கலைகளைப் பற்றிய
கணக்கு மட்டும் இல்லை .

உன்னை
வேண்டாமென்கிறார்கள்!
உன் தர்மத்தை
தள்ளி வைக்கிறார்கள்
அயல் நாட்டார்!
ஆனால் உன்
பழையோர்  கலை மட்டும்
வேண்டுமென்கிறார்கள்!
உனக்குப்
புரியவில்லையா ?..











Wednesday, July 26, 2017

ஒரு கோப்பைக் கடவுள்

கடலை (கடவுளை)
ஒரு
கோப்பையில் 
எடுத்து
ஊர் போய்க் 
காட்டினான்
சாமியார்...
கடல் (கடவுள்)
பார்க்காத 
ஜனங்களோ 
அக் கோப்பையை  
எட்டி எட்டி 
பார்த்தார்கள்.. 
இது தான்
கடலோ (கடவுளோ)
என்று...!
ஏதுமறியா ஒரு
சிறுவன் 
எட்டி பார்த்துச் 
சொன்னான்....
ஓ .... கடலுக்குள் (கடவுளுக்குள்)
நானே  தெரிகிறேன்!... 

Thursday, July 20, 2017

பசியும், படைப்பும்


பசியும் படைப்பவனும்
சமம்
இரண்டுக்குமே  நல்ல
படையல் வேணும்..

ஒருத்தன் ஆடு வைப்பான்...
இன்னொருவன்   அப்பம் வைப்பான்..
வேறொருத்தன்  பொங்க வைப்பான்..

வித  விதமாச் சாப்பிட்டா பசியாறும்..
வித விதமாப் படைச்சா பக்தியாறும்..

பசி இரைப்பையில் தோன்றுது
பக்தி இறைவனில் தோன்றுது

உலகப் பொதுவுடமையில்
பக்தியும், பசியும் ஒண்ணு
இதில்
எது
விஞ்சியது ?..





Wednesday, July 19, 2017

பொக்கிஷம்

"பத்து வைரங்கள்"
இரண்டு
"தங்கத்  தூண்களில்"
பூட்டப்பட்டுள்ளன...
ஆகா!
எனது  "கைகள்".
ஏன் முடியாதா
இந்தக் கைகளால்?
மேற்ச்சொன்னவைகளை
உருவாக்க...!!

கால விரயர்கள்

மணித் துளிகளைத்
தண்ணீராய்ச் 
செலவிடும் 
பரோபகாரிகள்...

இவர்கள் இட்ட 
நேர  தானத்தில்
செழித்துக் கொழிக்கிறார்கள் 
இந்த
ஊர்ச் சினிமாக்காரர்கள் ..
சின்னத்திரை வியாபாரிகள்..

பரவாயில்லை 
உங்கள் 
கருணையுள்ளம்..
எவருக்கும்
அரிதாய்த் 
தெரியும்  காலத்தையே 
கொடையாய்க்  கொடுக்கிறீர்கள்
பலருக்கு......



நல்ல நேரம் பார்க்காமல் 
இவர்கள் எதையும் 
செய்வதில்லை
பஞ்சாங்கம் பார்க்காமல் 
பயணப் படுவதில்லை..

எதையும் கணக்குப் பார்க்காமால்
செய்வதில்லை

ஆனால்

காலத்தை வீணடிப்பதைக்
மட்டும்?.