Wednesday, July 26, 2017

ஒரு கோப்பைக் கடவுள்

கடலை (கடவுளை)
ஒரு
கோப்பையில் 
எடுத்து
ஊர் போய்க் 
காட்டினான்
சாமியார்...
கடல் (கடவுள்)
பார்க்காத 
ஜனங்களோ 
அக் கோப்பையை  
எட்டி எட்டி 
பார்த்தார்கள்.. 
இது தான்
கடலோ (கடவுளோ)
என்று...!
ஏதுமறியா ஒரு
சிறுவன் 
எட்டி பார்த்துச் 
சொன்னான்....
ஓ .... கடலுக்குள் (கடவுளுக்குள்)
நானே  தெரிகிறேன்!... 

No comments:

Post a Comment